இறவான் | Iravaan

📗 நமது கைகளில் இன்று “இறவான்” Music, God and something in-between”

ஒரு கலைஞனை நினைவில் நிறுத்த அவனது ஒரு படைப்பு போதும். இன்னொன்று தேவை என்று உனக்குத் தோன்றினால் முதலாவது சரியில்லை என்று பொருள்.

ஒரு இசைக்கலைஞனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. அந்த இசைக்கலைஞனின் உளவியல் போராட்டங்கள், மன உளைச்சல்கள் மற்றும் அவனது கலையுலகப் பயணத்தில் அவன் அடையும் உச்சங்களை இந்நூல் சித்தரிக்கிறது. 

Author: பா. ராகவன்
No of Pages: 288
Language: Tamil
Book Format: Paperback
Published: 2019
Publisher: கிழக்கு பதிப்பகம்

Rs.1,899.00

1 in stock

இசையின் மூலம் பிரபஞ்ச விதிமுறைகளை மீறி ஒரு புதிய உலகத்தை உருவாக்கும் திறன் கொண்டவன் என்றும் சொல்லப்படுகிறது நாம் சொற்களில் வாழ்கிறோம். இந்நாவலின் நாயகன் இசையில் வாழ்கிறான். நாம் சமூக விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்குகிறோம். அவன் வாழ்க்கை பிரபஞ்ச விதி எதற்குள்ளும் பொருந்தாமல் புடைத்து நிற்கிறது. அதனாலேயே அது வண்ணங்களோ வாசனையோ இல்லாத ஒன்றாகிறது.

காலத்தை வெல்வதற்கு அவனுக்குள்ள வேட்கையும் அவனைத் தோற்கடிக்க விதி மேற்கொள்ளும் வேட்டையும் முட்டி மோதும் கணங்களில் புலி நின்று சுழல்கிறது. அவள் நம்பும் கலையும் அவன் வாழும் உலகும் தயங்காமல் அவனைக் கைவிடும் போதும், அவன் தான் வாழும் உலகுக்குத் தன் இசையையும், தான் நம்பும் இசைக்குத் தன்னையும் ஆகுதியாக்கி அர்ப்பணிக்கிறான். ஒரு மகா கலைஞனின் வாழ்க்கை இவ்வாறாக அல்லாமல் வேறு எந்த விதமாகவும் உருக்கொள்ள முடியாது

Reviews

There are no reviews yet.

Be the first to review “இறவான் | Iravaan”

Your email address will not be published. Required fields are marked *

இந்த புத்தகங்களையும் ஆராயுங்கள்…