நபித் தோழர்கள் வாழ்வியல் நிகழ்வுகள் (பாகம் 1/2)

நபித்தோழர்களுக்கென ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தி லும் உயர்ந்ததொரு சிறப்பிடம் இருக்கவே செய்கிறது. அவர்களை நேசிக்காதவரை அவர்களோடு மனப்பொருத்தம் கொள்ளாத வரை எந்தவொரு முஸ்லிமின் இறைநம்பிக்கையும் முழுமையடையாது.

Author: அப்துஸ் ஸலாம் நத்வி
Translator: சையத் அப்துர் ரஹ்மான் உமரி
Subject: மொழிபெயர்ப்பு, வாழ்க்கை வரலாறு
No. of pages: Part I – 426 | Part II – 500
Language: Tamil
Published on: 2022
Book Format: Hardcover
Publisher: தாருல் ஈமான் பதிப்பகம்

Rs.3,499.00

1 in stock

இறைவனின் தூதரை ஏற்றுக்கொண்டார்கள், அண்ணலாரின் வழியைப் பின்பற்றினார்கள். அண்ணலாரின் பின்னால் அணிதிரண்டு குஃப்ருக்கும் ஷிர்க்குக்கும் எதிராய் நிலைத்து நின்று போராடினார்கள். அப்போராட்டத்தில் தங்களுடைய உறவு, நட்பு, சொந்தம், பந்தம் அனைத்தையும் துச்சமாகக் கருதினார்கள். ஊர், உறவுகளைத் துறந்து ஹிஜ்ரத் புலம் பெயர்ந்து சென்றார்கள்.

இறைவனின் தூதரை நேரில் கண்டார்கள், அண்ணலாருக்கு இறைச்செய்தி வஹீ இறங்குவதைக் கண்களால் கண்டார்கள். இறைவனுடைய தூதரைக் காணும் பேறும் அண்ணலாரோடு உரை யாடும் வாய்ப்பும் நமக்கெல்லாம் கிடைக்கவேயில்லை. அந்த வாய்ப்பும் அளப்பறிய பேறும் அவர்களுக்குக் கிடைத்தது.

தமக்குக் கிடைத்த வாய்ப்பை அவர்கள் தமக்கிடையிலான கருத்து வேறுபாடுகளுக்கான களமாக ஆக்கிக் கொள்ளவில்லை. கல்விச் சண்டைக்கான தளமாக ஆக்கவில்லை. மாறாக, வெற்றிக் கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொண்டார்கள். ‘நீங்கள் வெற்றி யாளர்கள்தாம்!’ என்னும் நற்செய்தியை யாரிடமிருந்து பெற வேண்டுமோ அவனிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “நபித் தோழர்கள் வாழ்வியல் நிகழ்வுகள் (பாகம் 1/2)”

Your email address will not be published. Required fields are marked *

இந்த புத்தகங்களையும் ஆராயுங்கள்…