மண்டியிடுங்கள் தந்தையே | Mandiyidugal Thanthaiye

ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாயின் வாழ்க்கையை விவரிக்கும் இந்நாவல் அவருடைய வாழ்க்கை வரலாற்றில் நடந்த சில நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒன்று.
டால்ஸ்டாயின் வாழ்க்கையை ஒரு நாவலாக எழுதவேண்டும் என்ற எண்ணம் Summer in Baden-Baden நாவலைப் படித்தபோது தோன்றியது. அந்த நாவல் தஸ்தாயெவ்ஸ்கியின் சூதாட்ட வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.

Title: Mandiyidugal Thanthaiye
Author: S. Ramakrishnan
Category: நாவல் 
No of Pages: 248
Language: Tamil
Book Format: Hardcover
Published on: 2021
Publisher: தேசாந்திரி பதிப்பகம்

Rs.2,299.00

டால்ஸ்டாயை ஒரு கதாபாத்திரமாக்குவது எளிதானதில்லை அவர் எண்ணிக்கையற்ற கதாபாத்திரங்களை உருவாக்கியவர். உலகின் மிகச்சிறந்த படைப்பாளியாகக் கொண்டாடப்படுகிறவர். தேசந்தந்தை காந்தியின் குருவாக விளங்கியவர். ரஷ்ய தேசத்தின் ஆன்மாவாக அவரையும் தஸ்தாயெவ்ஸ்கியையும் கருதுகிறார்கள். அவரை ஒரு தமிழ் நாவலின் மையக்கதாபாத்திரமாக எழுதுவது என்பது பெரிய சவாலாக இருந்தது.

இந்த நாவலை எழுதுவதற்காக மூன்று ஆண்டுகள் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாறு, ரஷ்ய வரலாறு, டால்ஸ்டாயின் டயரிக்குறிப்புகள். டால்ஸ்டாய் குடும்பத்தினரின் நினைவலைகள், டால்ஸ்டாய் பற்றி எழுதப்பட்ட கட்டுரைத் தொகுப்புகள், அவரது சமகால எழுத்தாளரின் படைப்புகள், பண்ணை அடிமைகள் பற்றிய அறிக்கைகள் போன்றவற்றை படித்து ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார்

எழுத்தாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு சர்வதேச அளவில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் தமிழில் இதுவரை இப்படி ஒரு நாவல் வெளியானதில்லை. அதுவும் ஒரு ரஷ்ய எழுத்தாளரின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல் இந்நாள் வரை எழுதப்பட்டதில்லை. இதுவே முதன்முறை

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “மண்டியிடுங்கள் தந்தையே | Mandiyidugal Thanthaiye”

Your email address will not be published. Required fields are marked *

இந்த புத்தகங்களையும் ஆராயுங்கள்…