மௌன வசந்தம் | Silent Spring

உலகை மாற்றிய ஐந்து புத்தகங்களில் ஒன்று. சுற்றுச்சூழல் குறித்த முதன்மையான நூல்.

எனக்கு மனித இனத்தின் மேல் நம்பிக்கை இல்லை ஏனென்றால் அது நிலத்தை அழிக்கும் அளவிற்கு அறிவைப் பெருக்கிக் கொண்டுவிட்டது. இந்தப் புத்தகத்தின் சில பகுதிகள் சிலருக்குப் பிடிக்கவில்லை என்றால் அல்லது அவர்கள் அதில் காணப்படும் விவாதங்கள் மறுப்பு தெரிவிக்கப்படக் கூடியவை என்று கருதினால் அவர்கள் மொத்த நிலையையும் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நாம் மிக ஆபத்தானவற்றைக் கையாண்டு வருகிறோம்

Title: Silent Spring (English)
Author: Rachel Carson
Translator: Prof. S. Vincent
Subject: சூழலியல் | Ecology
No. of pages: 240
Book Format: Paperback
Published on: 2013
Publisher: எதிர் வெளியீடு

Rs.1,989.00

1 in stock

இந்தச் சிறப்புமிக்க, சர்ச்சைக்குரிய நூலில் செல்வி ரெய்ச்சல் கார்சன் மனிதனின் தொழில் நுட்ப முன்னேற்றத்தின் மிக முக்கியமான ஆனால் சந்தேகத்திற்குரிய தன்மையை மிக ஆணித்தரமாக உயிரியல் பயிற்சி மற்றும் தனது எழுத்தாற்றலைப் பயன்படுத்தி விளக்கியிருக்கிறார்.
நச்சுத் தன்மையுள்ள இரசாயனப் பொருட்களை அமெரிக்காவின் கிராமப் புறங்களில் பயன்படுத்துவது மற்றும் பூச்சிக் கொல்லிகள், பூஞ்சக் காளான் கொல்லிகள், களைக் கொல்லிகள் ஆகியவற்றால் வன உயிரினங்கள் அழிக்கப்படுவது ஆகியவற்றைப் பற்றிய கதை இது.
ஆனால் மௌன வசந்தம் நச்சுப் பொருட்களைப் பற்றியது மட்டுமில்லை. அது சுற்றுப்புறச்சூழலைப் பற்றியது. தாவரங்களும் விலங்குகளும் சுற்றுப்புறசூழலுடன் உள்ள உறவுகளை, ஒன்றுக்கொன்று உள்ள தொடர்புகளைச் சொல்லும் கதை.

நாம் நமது நகரங்களின் காற்றை மாசுபடுத்துகிறோம். ஆறுகளையும், கடல்களையும் நச்சு மயமாக ஆக்குகிறோம். மண்ணையும் நஞ்சாக்குகிறோம். இவற்றில் சில தவிர்க்க முடியாதனவாக இருக்கலாம். ஆனால் நமது பூமி அன்னையின் மேல் நாம் நடத்தும் தாக்குதல்களை நிறுத்த உண்மையான தீவிர முயற்சிகளை எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் எடுக்காவிட்டால், நாம் ஒரு நாள் பிளாஸ்டிக்கும், கான்கிரீட்டும், மனித ரோபோட்டுகளும் நிறைந்த பாலைவனத்தில் உட்கார்ந்திருப்போம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “மௌன வசந்தம் | Silent Spring”

Your email address will not be published. Required fields are marked *

இந்த புத்தகங்களையும் ஆராயுங்கள்…